தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50400/- சம்பளத்தில் அரசு வேலை !
மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
மீன்வள உதவியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. 13.09.2021 அன்றுள்ளபடி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15900 – 50400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும். மற்றும் மீன்வளத் துறை யினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி – 627421 என்ற முகவரிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்முக தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.