தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைவு – அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் மின் வாரியம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் தமிழக மின் வாரியம் பல கோடி ரூபாய் கடனில் உள்ளதால் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் மின் வாரியம் விளக்கம் அளித்தது. அத்துடன் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான மானிய விலை மின்சாரம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சார விநியோகமும் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் மின் வாரியம் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக மின் வாரியம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை இன்று 10% குறைந்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் அதிகப்படியான மின் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.
11,000 ஊழியர்களை கொத்தாக வீட்டிற்கு அனுப்பிய பேஸ்புக்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய பணி நீக்கம்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் 25% லிருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.