11,000 ஊழியர்களை கொத்தாக வீட்டிற்கு அனுப்பிய பேஸ்புக்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய பணி நீக்கம்!
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக முன்னணி நிறுவனங்கள் நிர்வாக செலவுகளை குறைக்கும் வண்ணம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் 2022ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்த ஊழியர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
வேலை நீக்கம்:
தற்போது உக்ரைன் -ரஷ்யா போர் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிர்வாக செலவுகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் அண்மையில் ஐடி துறையில் மூன் லைட்டிங் பிரச்சனையில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை பணி நீக்கம் செய்தது. முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.
NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? முக்கிய தகவல்!! முழு விபரம் உள்ளே!!
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டில் மட்டும் பேஸ்புக் சுமார் 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இது மொத்தமுள்ள ஊழியர்களில் 13% ஆகும். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டு வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.