தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3ம் அலை தொடக்கம்? அரசின் முயற்சிகள்!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை காண்போம்.
அரசின் முயற்சிகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் குறைந்து வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அளித்து வந்தது. இரண்டாம் அலையின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் மற்றும் அரசு இரண்டு தரப்பையும் மிகவும் பாதிப்படைய செய்தது. இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து இன்னும் யாரும் மீண்டு வரவில்லை.
நீட் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – அறிவுறுத்தல்கள் வெளியீடு!
ஆனால் மருத்துவ நிபுணர்கள் கொரோனா 3ம் அலையின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடுத்து வரும் 100 நாட்களில் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தினசரி 30,000 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பு 1,500க்கும் மேல் இருந்து வந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக சற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் நேற்று மீண்டும் பாதிப்பு 1,600 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 174 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும் திருப்பூரில் 113 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை திட்டம்!
இதற்காக தமிழக அரசு கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக பலவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனையை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.