தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை திட்டம்!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா 3ம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா தாக்கத்தை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தின் 3வது அலையை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வாரங்களில் அதிக பரிசோதனையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பூசி போட்டு முடிக்கும் வரை பொதுமக்கள், அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும் – ரயில்வே திட்டம்!
அதே போல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குவதும் முக்கியமானது. எனவே மெகா தடுப்பூசி முகாமிலும், வார நாட்களிலும் தடுப்பூசி போடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2வது தவணையும் முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் கொண்டு முறையாக கண்காணிக்க வேண்டும். தொற்று அதிகரிக்கும் இடங்களில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.