தமிழகத்தில் தற்போதைய ஆக்சிஜன் இருப்பு – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மருத்துவமனைகளில் உள்ள தற்போதைய ஆக்சிஜன் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஆக்சிஜன் நிலவரம்:
மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் 24 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர தினமும் 200 பேர் வரை பலியாகின்றனர். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி நேற்று (மே 6) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தற்போதைய ஆக்சிஜன் இருப்பு குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
தவிர தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை அனைத்து நோயாளிகளுக்கும் முழுமையாக பயன்படுத்தவும், இன்னும் தேவையானால் மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆக்சிஜன் பெற்று நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் உறுதிப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.