மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாநிலங்கள் தோறும் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளாக இரண்டு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக அம்மாநிலத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 17,532 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 161 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், மே மாதம் 10ஆம் தேதி காலை 5 மணி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்குடன் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு;
பொது சேவை ஆணைய தேர்வுகள் (HPPSC) ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
- ஊரடங்கு காலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருக்கும்.
- அவசர கால உதவியாக தனியார், அரசு வாகனங்கள் மட்டும் செயல்படும்.
- மாநிலத்துக்கு இடையேயான சரக்கு வாகனங்களுக்கு அனுமதி.
- வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.
- நெகட்டிவ் சான்றிதழ் இருந்தாலும், 15 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்.
- ஏற்கனவே அறிவித்தபடி கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும்.
- மே 31 வரை திருமண விழாக்களுக்கு தடை.
- மண்டபங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.
- தவிர 11 பேருடன் நடக்கும் வீட்டு திருமணத்திற்கு மட்டும் அனுமதி.