தமிழக தலைமை செயலகத்தில் 50% ஊழியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!
சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்தில் உள்ள ஊழியர்கள் 200 பேருக்கு கடந்த 2 வாரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் 50% ஊழியர்கள் பணியாற்ற அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அரசு பலத்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளின் நேரம் குறைக்கப்பட்டு, பணியாளர்கள் சுழற்சி முறையில் அலுவலகத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசில் 216 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் ஒரு நாளில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை பொது ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர்கள் கடந்த 2 வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அங்கு 50% பணியாளர்கள் மட்டும் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.