தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் நேற்று (பிப்ரவரி 8) முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வைட்டமின் மாத்திரைகள்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் ஆதரவு அளித்த நிலையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. 11 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.
அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணிநேரம் பணி – ஐகோர்ட் புதிய உத்தரவு!!
மேலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பொழுது வைட்டமின் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இது மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரக்குழு எச்சரிக்கை!!
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 9, 11ம் வகுப்புகளில் பயிலும் 19 லட்சம் மாணவர்களுக்கு 40 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 10 வைட்டமின் மாத்திரை மற்றும் 10 நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்