அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணிநேரம் பணி – ஐகோர்ட் புதிய உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு 8 மணிநேரம் பணி நிர்ணயம் செய்யப்பட்டு பிறப்பிக்கப்ட்ட ஆணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பயிற்சி மருத்துவர்கள்:
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆகியோருக்கு 8 மணிநேரம் அரசு மருத்துவமனையில் பணி நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இதுவரை அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனால் பயிற்சி மருத்துவ மாணவர்கள் பணிச்சுமை காரணமாக மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.
187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரக்குழு எச்சரிக்கை!!
இது தொடர்பாக 2019ம் ஆண்டு மருத்துவர் ரவீந்திரநாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பயிற்சி மருத்துவர்களின் பணிநேரம் குறித்த அறிவிப்பு இன்று வரை பின்பற்றப்படுவதில்லை. இதனால் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக மதுரை மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த உதயகுமார் எனும் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எம்.டெக் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து இல்லை – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது, ஒரு ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்கு என்பதால் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணிநேரம் பணி என்கிற உத்தரவை அமல்படுத்துதல் குறித்த வழக்கில் மருத்துவ கல்வி இயக்குனரகம் இன்னும் 6 வாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்