தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்களின் எதிர்கால கல்வியை கவனத்தில் கொண்டு பள்ளிகளை மீண்டுமாக திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பேரலை தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் 2022ம் புத்தாண்டு பண்டிகையின் போது கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்த அரசாங்கம், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்திருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் முக ஸ்டாலின் கடந்த டிச.31ம் தேதியன்று உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்ட ஆரம்ப மற்றும் நடுநிலை மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டுமாக மூடப்படக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் தமிழக தனியார் பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

என்றாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வகையான வகுப்புகளும் இல்லாமல் கற்றல் செயல்முறை மீண்டுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தவிர அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்பாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்கிற தகவல்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் இருந்து வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!

இப்போது, ஏற்கனவே முறையாக கல்வி இல்லாமலேயே ஆரம்ப பள்ளி மாணவர்கள் சில வகுப்புகளை முடித்துள்ளனர். இந்த நிலை மேலும் நீடித்தால் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி என்பது கிடைக்காமலே போய் விடக்கூடும் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். அதனால் 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!