தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நேரடி பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் நலனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலே கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை போல் இந்த ஆண்டு இருக்காது என்றும் பொதுத்தேர்வு கண்டிப்பான முறையில் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!
தற்போது பல மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு உரிய பாடங்கள் நடத்தும் அளவிற்கு போதிய காலம் இல்லை என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுழற்சி முறை வகுப்புகள் இன்றி தினசரி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தினசரி வகுப்புகள் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடங்கியுள்ளது. ஏனெனில் தற்போது உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மீண்டும் மாற்றம்? சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆலோசனை!
ஆனால் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி தொடரும் என்று தகவல் நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி சென்னையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கண்டிப்பாக நேரடி முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஏனெனில் மாணவர்களுக்கு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.