செப்.17 முதல் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; பலி எண்ணிக்கை 27 – சுகாதாரத்துறை அறிக்கை!
12ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவும் பொருட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 19ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிட்டார். பின்னர் அசல் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு வழங்கிய மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடத்த இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், இன்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2019- 2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 17ம் தேதி முதல் மாணவர்கள் தங்களின் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசு அறிவித்துள்ள அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.