தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; பலி எண்ணிக்கை 27 – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகம் முழுவதும் இன்று புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 23 மாவட்டங்களில் புதிய இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தை பொறுத்தவரை 2ம் அலை பாதிப்பு முடிந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மக்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது 3ம் அளவு பாதிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், தமிழகத்திலும் பாதிப்புகள் மெல்ல மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்றைய தொற்று பாதிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கா அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 27 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது. இன்று பதிப்பில் இருந்து 1,537 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,85,244 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,52,296 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 4,45,27,080 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 212 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 546646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.