TN 12 வது மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
தமிழகத்தில் நடந்து முடிந்த 12 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் 2022 -2023ம் கல்வி ஆண்டில் மொத்தம் 8.8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்கள். மாநிலத்தில் மொத்தம் 3169 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது.
மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவும் வகையில், நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாகவே அறிவித்தது. தற்போது முடிவுகள் வெளியாகிவிட்டது. அதனை, தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசின் இணையத்தளங்களின் மூலம் உடனடியாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.