ஜீவாவை மதிக்காமல் இருக்கும் ஜனார்த்தனன்.. தனியாக தொழில் தொடங்குவாரா? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவை மரியாதை இல்லாமல் ஜனார்த்தனன் பேச, எல்லாரும் ஒரே மாதிரி தான் என ஜீவா மீனாவிடம் புலம்புகிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் ஜீவா புதிய தொழில் தொடங்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜீவாவிற்கு குடும்பத்தில் சில மரியாதை இல்லை என வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இங்கே ஜனார்தனனும் அவர் சொல்வது போல தான் நடந்து கொள்ள வேண்டும் என ஜீவாவை சொல்ல, எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க, நாம தான் தவறாக புரிந்து கொண்டோம் என ஜீவா புரிந்து கொள்ள தொடங்கிவிட்டார்.
ஆனால் கதையில் பெரிய திருப்பமாக அவர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேராமல் தனியாக தொழில் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அதில் அவர் முன்னேற வேண்டும் என மீனாவும் அவருக்கு உதவி செய்ய, அதை பார்த்து மூர்த்தி சந்தோசப்படுகிறார். ஆனால் அந்த தொழிலும் பல கஷ்டம் வர, அண்ணன் அருமை ஜீவாவிற்கு விரைவில் புரிய வந்து குடும்பம் ஒன்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.