தமிழகத்தில் மே 5 முதல் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது குறித்த முழு விவரத்தையும் கீழே முழுமையாக பார்ப்போம்.
பள்ளிக்கல்வித்துறை
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. அதை தொடர்ந்து நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் முதல் தொடங்கி மே 30ம் தேதி வரையும், அடுத்தாக, 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் அடுத்தாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், மேலும் தேர்வுகள் நடைபெறாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை என்று கூறியுள்ளார்.