ரூ.57,700/- ஊதியத்தில் பேராசிரியர் வேலைவாய்ப்பு !
டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS) அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Professors, Associate Professors, Assistant Professors பணிகளுக்கென 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | டாடா சமூக அறிவியல் நிறுவனம் |
பணியின் பெயர் | Professors, Associate Professors, Assistant Professors |
பணியிடங்கள் | 23 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TISS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Professors, Associate Professors, Assistant Professors பணிகளுக்கென 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Professors – 10 பணியிடங்கள்
- Associate Professors – 5 பணியிடங்கள்
- Assistant Professors – 8 பணியிடங்கள்
TN Job “FB Group” Join Now
TISS கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate/ Ph D Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TISS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Professors – ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- (Level 14)
- Associate Professors – ரூ.1,31,400/- முதல் ரூ.2,17,100/- (Level 13A)
- Assistant Professors – ரூ.57,700/- முதல் ரூ.1,82,400/- (Level 10)
TISS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TISS விண்ணப்ப கட்டணம்:
- General, OBC, EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.2000/-
- SC/ ST/ PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
TISS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TISS விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.30.1.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.