மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மதுக்கடை மூடல் – ஆட்சியர் அதிரடி உத்தரவு!! இது தான் காரணம்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுக்கடை மூடல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் முக்கிய நிகழ்வாக கோவிலின் பின்புறம் இருக்கும் 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில் இந்த ஆண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகிற நவம்பர் 27ம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கோவில் கருவறையில் பரணி தீபம் அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.
தமிழகத்தில் நாளை கனமழை.. பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை? – வானிலை மையம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
இந்த தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை கோவிலுக்கு அருகில் இருக்கும் அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்களை டிசம்பர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை என 6 நாட்கள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.