தமிழகத்தில் நாளை கனமழை.. பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை? – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் நாளை கனமழை.. பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை? - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை.. பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை? - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை.. பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை? – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்றும் (நவ. 23), நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட வாய்ப்பு இருக்கிறதா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

ஆண்டுதோறும் தமிழகத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில், கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. மேலும் தற்போது வங்க கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனால் வட தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து தென் தமிழகத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலை கொண்டு இருப்பதால் மழை பாதிப்பு குறைவாக இருக்கிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.1000 – ஆட்சியர் அறிவிப்பு!!

Exams Daily Mobile App Download

இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (நவ. 23) நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பாதிப்பை பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (நவ. 23) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!