திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு – பக்தர்கள் கவனத்திற்கு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிறப்பு தரிசனம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் தரிசனத்திற்கு வழிபாட்டு தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலிலும் பொதுமக்களின் தரிசனத்திற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. முன்னதாக சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் மீண்டும் நடப்பு ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்பக்கம் அவகாசம் அளித்துள்ளது.
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!
திருப்பதி கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் உலகின் பல பகுதியிலிருந்தும் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவார்கள். தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13,358 பேர் திருமலையில் தரிசனம் செய்துள்ளனர். ஸ்ரீவாரி உண்டியலில் ரூ.1.08 கோடி பணம் வசூலாகியுள்ளது.
தமிழகத்தில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை – டாஸ்மாக் எச்சரிக்கை!
தற்போது இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்ககப்பட்டுள்ளது. ஒரு நாளில் 5,000 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்டுகின்றனர். ஜூன் 22, 23 மற்றும் 24ம் தேதிக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.