தமிழகத்தில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை – டாஸ்மாக் எச்சரிக்கை!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட, அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மது விற்பனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது போக்குவரத்து சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மருந்துகள், மருத்துவ உதவிகள் தடையின்றி தொடர்ந்து கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது.
ஜூன் 21 க்கு மேல் முழு ஊரடங்கில் கடைசி தளர்வுகள் – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகளும் அளிக்கபட்டது. இந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதித்துள்ளது. ஊரடங்கால் மதுக்கடைகள் ஒரு மாத காலமாக மூடப்பட்டு இருந்தது. தற்போது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை செய்ய அரசு அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் இன்று முதல் மீண்டும் திறப்பு – சுற்றுலா பயணிகள் ஆர்வம்!
அனைத்து கடைகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி மது வகைகளை விற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மதுக்கடைகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ள டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. மேலும் மது பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.