திருச்சி விமான நிலையத்துடன் திருப்பதி விமான நிலையம் இணைப்பு – மத்திய அரசின் முடிவு!
தனியார் மயமாக்கும் திட்டத்தின் கீழ் திருச்சி விமான நிலையத்துடன் திருப்பதி விமான நிலையத்தை இணைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு முடிவு:
நாடு முழுவதும் தனியார்மயமாக்கல் திட்டம் குறித்து பரபரப்பாக கருத்துக்கள் உலவி வருகின்றது. இந்நிலையில், மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் தனியார் மயமாக்கப்படும் 13 விமான நிலையங்களில் திருப்பதி விமான நிலையமும் ஒன்றாக உள்ளது. பக்தர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திருப்பதிக்கு விமானம் மூலம் வருகின்றனர்.
ட்ரோன் மூலம் வான் வழியாக மருந்து விநியோகம் செய்யும் திட்டம் – மத்திய அரசின் புதிய முயற்சி!
திருச்சி விமான நிலையத்துடன் தனியார் மயமாக்கும் திட்டத்தில் திருப்பதி விமான நிலையத்தை மத்திய அரசு இணைத்துள்ளது. திருப்பதி கோயிலை தரிசனம் செய்ய பெரும்பாலானோர் ரயில் பயணத்தையும் விமான பயணத்தையும் விரும்புகின்றனர். சமீபத்தில் விமானம் மூலம் திருப்பதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இயங்கும் பெரிய விமான நிலையத்துடன், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி 22 கோடி வருவாயுடன் லாபத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்துடன் 35 கோடி நஷ்டத்தில் உள்ள திருப்பதி விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலையத்திற்காக மாநில அரசு 712 ஏக்கர் நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. 200 கோடி செலவில் ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் பார்க்கிங் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.