திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – சூறைக்காற்றுடன் கனமழை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் பரவலாக மழை பெய்து மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
திருப்பதி
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & ஊதிய உயர்வு அறிவிப்பு!
அதன்படி தற்போது பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக நேற்று மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
Exams Daily Mobile App Download
அதனால் சாலைகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் இந்த மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் செல்லும் வழியிலும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். இதையடுத்து சாலைகளில் விழுந்த மரங்களை அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு உதவி செய்தனர்.