மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & ஊதிய உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான வரும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4% வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயரும். மேலும் இதனால் அடிப்படை ஊதியமும் அதிகரிக்கும்.
அகவிலைப்படி:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்பட்டது வருகிறது. அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மேலும் 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4% வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலின் படி அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டால் மொத்தம் 38% ஆக அகவிலைப்படி அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் அதிகரிக்கும்.
Exams Daily Mobile App Download
அதாவது அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறும் நபர் 38% அகவிலைப்படி உயர்வால் மாத ஊதியத்தில் ரூ 21,622 அதிகரிக்கும். மேலும் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் 38% அகவிலைப்படி உயர்வால் மாதம் ரூ.6840 கூடுதலாக பெறுவர். அரசின் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.