திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து – கொரோனா பரவல் எதிரொலி!!
திருப்பதி கோவிலில் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி நாளை முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தரிசனம் ரத்து:
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு இடங்களிலும் அரசின் அறிவிப்பின் படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பிறகு மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் படி மீண்டுமாக ஜூன் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருப்பதியில் ஒவ்வொரு நாளும் 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
பின்னர் கொரோனா தளர்வுகளுடன் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டு தினமும் 40 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி கோவிலில் நாளை முதல் பக்தர்களின் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்