பெண்களுக்கு ரூ.15,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – நேர்காணல் மட்டுமே..!
திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் , பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒன் ஸ்டாப் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO) தற்போது வழக்கு பணியாளர் எனும் Case Worker பணிக்கு என்று ஆள் நிரப்பிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்துள்ளோம். இதன் மூலம் 30.04.2022 ம் தேதிக்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Social Welfare Office (DSWO) |
பணியின் பெயர் | Case Worker |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DSWO காலிப்பணியிடங்கள்:
மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Case Worker பணிக்கு என்று 3 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்பிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ExamsDaily Mobile App Download
DSWO தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சமூகவியல் / சமூகப்பணி / உளவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 1 வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணி முற்றிலும் பெண்களுக்கானது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DSWO ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.15,000/- ஊதியம் பெறுவார்கள்.
DSWO தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DSWO விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரியும் இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி, அனுப்ப வேண்டும்.