Ph.D முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ஜன.31ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்தி வைக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் Ph.D முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்து அறிவித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
அத்துடன் கல்லூரிகளுக்கும் இனி வரும் காலங்களில் நேரடி முறையில் மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஜனவரி 21ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால் கல்லூரிகளுக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜனவரி 21ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? ஜனவரி 21ம் தேதி முடிவு!
இந்நிலையில் Ph.D முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்து உள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனை பற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டிருந்தாவது நடப்பாண்டிற்கான முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்துவிட்டது. அத்துடன் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ம் தேதி வரையில் Ph.D முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.