தமிழகத்தில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மின் இணைப்பு கம்பியில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் மின்தடை ஏற்படுகிறது.
Ph.D முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ஜன.31ம் தேதி கடைசி நாள்!
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக நாளை தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன.19) புதன்கிழமை அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் துணை மின் நிலையத்துக்கு மின் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதன்படி இங்குள்ள துணை மின் நிலையத்தின் மூலமாக மின் விநியோகம் பெறும் பகுதிகளான தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமத்திலும் நாளை (ஜன.19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. அதனால் இங்குள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.