தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
பள்ளிகளில் நேர மாற்றம்:
கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திட்டமிட்டபடி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 13 ஆம் தேதி முதல் புது கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் வழங்கினர்.
அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் ஜூன் 13 ஆம் தேதி முதல் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளிக்கூடம் இயங்கும் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில் இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி பின் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.