திருப்பதி தரிசனம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிக்கெட் முன்பதிவு! முக்கிய தகவல்!
திருப்பதியில் சுவாமி தரிசம் செய்ய நவம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து பக்தர்களை வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய செய்ய வேண்டும். இதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் விநியோகம் ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 35,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Post Office இல் மாத வருமானம் பெறும் வழி – முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஆந்திராவில் பெய்த அதிக கனமழையால் திருமலை பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. திருப்பதி கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீர் பக்தர்களை சிரமத்திற்கு உள்ளாகியது. அதனால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மழை நின்றவுடன் எப்போது வேண்டுமானாலும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
‘பிக் பாஸ்’ ஜூலியை ஏமாற்றிய காதலன் – நடந்தது என்ன? ஷாக் ரிப்போர்ட்!
அதன்படி நவம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.இதனால் பேட்ஜ்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.