மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% DA உயர்வு? மார்ச் மாதத்தில் வெளியாகும் அறிவிப்பு!
நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையுடன், 3% DA உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அகவிலைப்படி (DA) உயர்வுத்தொகை குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது ஹோலிக்கு முன், மோடி அரசாங்கம் அகவிலைப்படி தொகையை 3 சதவீதம் உயர்த்த இருப்பதாக தெரிகிறது. இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய DA நிலுவைத் தொகை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் – முழு விபரம் இதோ!
இது தொடர்பான முந்தைய அறிக்கையில், JCMன் தேசிய கவுன்சில் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி நிலை-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், நிலை-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு), ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அமைச்சரவை, DA உயர்வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! பொதுமக்கள் அச்சம்!
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்த அகவிலைப்படி (DA) தொகை 31 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி 2022 தவணையுடன் 34 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் கொடுக்கப்படும் ஒரு அங்கமாகும். அதாவது, அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை உள்ளிட்ட 2 மாதங்களில் DA மற்றும் DR சலுகைகளை வழங்கி வருகிறது. இத்தொகை ஒவ்வொரு நிலை ஊழியர்களுக்கும் வித்தியாசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.