தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பின் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
மீண்டும் ஊரடங்கு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பல வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நமது நாட்டிலும் கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் பல மாநில அரசுகளின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. மூன்றாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் தடுப்பூசி செலுத்தியதன் பலனாக பாதிப்பு எண்ணிக்கை விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு படிப்படியாக வந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு சுமார் 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, நேற்று (பிப். 19) அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் பலர் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வாக்குகளை செலுத்தினார்கள்.
மதுரை காமராஜர் பல்கலையில் ஒரு மணி நேரத்திற்கான ஊதியத்துடன் வேலை..!
ஆனால் அரசியல் கட்சி பிரச்சாரங்கள், வாக்கு சாவடிகளில் அதிகமான மக்கள் கூட்டம் காரணமாக கொரோனா விதிகள் கடைபிடிக்க முடியவில்லை. அதனால் தேர்தலுக்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சில தகவல்கள் பரவி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பலர் தற்போது தான் மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு என்ற தகவலால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.