தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!
தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள பல்வேறு Social Worker Member பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதிவில் கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறை சார்பில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில் Social Worker Member பணிக்கு பல்வேறு இரு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- வெளியான அறிவிப்பின்படி டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறது.
Best TNPSC Coaching Center – Join Now
- Social Worker Member பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 08.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி” மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு.
176, முத்து சுரபி கட்டிடம். மணி நகர்,
பாளை ரோடு,
தூத்துக்குடி 628003