ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம், அதிர்ச்சியில் பாக்கியா – சீரியலில் இந்த வாரம்!
இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பாக்கியாவும் கலந்துகொள்கிறார். மண கோலத்தில் ராதிகாவின் பக்கத்தில் இருக்கும் கோபியை பார்த்து பாக்கியா அதிர்ச்சியடைந்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8. 30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டிருக்கும் பாக்கியாவை விட்டு விட்டு கோபி ராதிகாவை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இடையூறாக இருக்கும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட வேண்டும் என கோபி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். தன்னை கோபி விவாகரத்து செய்யப் போகிறார் என்கிற உண்மையை அறியாத அப்பாவி பெண்ணாக பாக்கியா இருந்து வருகிறார்.
ஒருபுறம் சீரியல் நடிகை, மறுபுறம் குத்துசண்டை வீராங்கனை – ஐரா அகர்வால் கொடுத்த ஷாக்!
இந்நிலையில் எதேர்ச்சையாக பாக்கியா மற்றும் செல்வி இருவரும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். பாக்கியாவை பார்த்த கோபி வீட்டிற்குள் போய் பதுங்கி கொள்கிறார். இந்த வீட்டில் வேறு யாரோ இருப்பதாக செல்விக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. உடனே ராதிகா நானும் எனது நண்பரும் தொடர்பில் இருந்து வருகிறோம். விரைவில் திருமணம் செய்ய இருக்கிறோம். அவர் தான் உள்ளே இருக்கிறார். நான் உங்களை அவரிடம் அறிமுகப்படுத்துகிறேன் என ராதிகா கோபியை அழைக்க உள்ளே செல்கிறார். உடனே கோபி வேலை விஷயமாக யாரிடமோ பேசுவது போல நடிக்கிறார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இருந்து வெளியேறிய அந்தோணி தாஸ் – ரசிகர்கள் ஷாக்!
பாக்கியாவை சந்திக்க மட்டும் கோபி ஏன் இவ்வாறு பயப்படுகிறார் என ராதிகாவிற்கு சந்தேகம் வந்து விடுகிறது. ராதிகாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரியவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வேளையில் இந்த வாரம் ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பாக்கியாவும் கலந்துகொள்கிறார். மண கோலத்தில் கோபி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். கோபியின் விருப்பப்படி ராதிகாவை திருமணம் செய்ய பாக்கியா அனுமதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.