தமிழகத்தில் இன்று முதல் 18 நாட்களுக்கு ‘இந்த’ ரயில் ரத்து – அதுவும் எதற்காக தெரியுமா?

0
தமிழகத்தில் இன்று முதல் 18 நாட்களுக்கு 'இந்த' ரயில் ரத்து - அதுவும் எதற்காக தெரியுமா?
தமிழகத்தில் இன்று முதல் 18 நாட்களுக்கு 'இந்த' ரயில் ரத்து - அதுவும் எதற்காக தெரியுமா?
தமிழகத்தில் இன்று முதல் 18 நாட்களுக்கு ‘இந்த’ ரயில் ரத்து – அதுவும் எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகளையும் மற்றும் ரயில்களையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் ரத்து

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மகிழ்ச்சியாக செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.

தமிழக மின் பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – எச்சரிக்கை பதிவு!

அதனால் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையானது அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் இயங்கி கொண்டிருந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் (06802) மற்றும் கோவை- சேலம் பாசஞ்சர் ஆகிய இரு ரயில்களும் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை என 18 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்காக ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!