திருவண்ணாமலைக்கு ‘இதன்’ பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – அதிகாரி தகவல்!!

0
திருவண்ணாமலைக்கு 'இதன்' பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - அதிகாரி தகவல்!!
திருவண்ணாமலைக்கு 'இதன்' பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - அதிகாரி தகவல்!!
திருவண்ணாமலைக்கு ‘இதன்’ பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – அதிகாரி தகவல்!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதிகாரி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழாவானது கடந்த 27ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் கலந்து கொள்வார்கள்.

Exams Daily Mobile App Download

அதனால் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் இத்திருவிழாவை கொண்டாட மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா – 2,700 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதையடுத்து இந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக எஸ்.பி.கார்த்திகேயன் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!