தமிழ்நாடு அரசு பேரூராட்சியில் வேலை – தேர்வு கிடையாது || 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களில் காலியாகவுள்ள தூய்மை பணியாளர் – 6, மஸ்தூர் – 2 மற்றும் குடிநீர் திட்ட காவலர் – 1 ஆகிய பணியிடங்களை இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்திட இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவகர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சி |
பணியின் பெயர் | தூய்மை பணியாளர், மஸ்தூர் மற்றும் குடிநீர் திட்ட காவலர் |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிட விவரங்கள்:
- தூய்மை பணியாளர் – 6
- மஸ்தூர் – 2
- குடிநீர் திட்ட காவலர் – 1
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது பற்றிய விபரம் பதிவு தபால் மூலம் விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021-ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பத்தினை திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவ தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் பதிவு தபாலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரில் மற்றும் இதர வழிகளில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.