தமிழகத்தில் 2 கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு முதியோர் உதவித்தொகை கிடையாது? அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் முதியவர்களுக்கு அவர்களின் முதிர்வு காலத்தில் உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உதவித்தொகை அளவு உயர்ந்து கொண்டு வருவதால் இதனை குறைப்பதற்காக அரசு சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது.
முதியோர் உதவித்தொகை
தமிழகத்தில் அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக மருத்துவ காப்பீடு, பயண கட்டண சலுகை, உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில் முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இந்த உதவித்தொகை பெறுவதில் தமிழக அரசு சில மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஏனெனில் முதியவர்களுக்காக வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இந்த உதவித்தொகை பெற சில நிபந்தனைகளை வகுத்துள்ளது. மேலும் இது குறித்த அரசாணையில், அரசுப் பணி செய்தவர்கள், ரூ.1 லட்சத்திற்குமேல் சொத்துப் பரிமாற்றம் செய்தவர்கள், ரூ.1 லட்சத்திற்கு மேல் நகைக்கடன் பெற்றவர்கள், சர்க்கரை மற்றும் `N’ குடும்ப அட்டை உடையவர்கள் உள்ளிட்டவர்க்ள மூத்த குடிமக்களுக்கான உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 49 இறப்புகள் பதிவு
மேலும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 2 கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நிபந்தனைகளில் 2 கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் முதியவர்களே அதிகம் உள்ளனர். இவர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக உள்ளது. அத்துடன் இவர்கள் 1 கேஸ் சிலிண்டரை ரத்து செய்தால் மட்டுமே மீண்டும் உதவித்தொகையை பெற முடியும். ஆனால் தற்போது சிலிண்டர் பயன்பாடு அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆதலால் 2 கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழக்கம் போல வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.