சுடர் என் குழந்தையா?? உண்மையை அறியும் வெற்றி – தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்!
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் மிகவும் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை வருடங்களாக வெற்றிக்கு தெரியாமல் இருக்கும் பல உண்மைகளும் தெரிய வருகிறது.
முக்கிய தருணம்:
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றிக்கு சுடரை பற்றிய எந்த உண்மையும் தெரிய கூடாது என்பதில் இத்தனை வருடங்களாக உறுதியாக உள்ளார் அபி. சுடர் தன் குழந்தை தான் என்று தெரியாமல் வெற்றி, சுடர் மீது அதீத பாசமாக இருக்கிறார். சுடரும் வெற்றி மீது கண்மூடித்தனமாக பாசமாக இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் தான் அபிக்கு மற்றொரு திருமணம் நடக்கவில்லை என்று வெற்றிக்கு தெரிய வருகிறது.
மேலும், வெள்ளை ராஜா அபியை கடத்தி கடலுக்கு கொண்டு செல்ல, வெற்றி அபியை கண்டுபிடித்து காப்பாற்றுகிறார். வெற்றி கொண்டு சென்ற போட்டில் டீசல் இல்லாமல் நடுக்கடலில் நின்று விடுகிறது. அபியும், வெற்றியும் மட்டும் தனியாக இருக்கும் நிலையில், அபி தன்னை அறியாமலே சுடர் உன் குழந்தை தான் என்று வெற்றியிடம் சொல்லி விடுகிறார். இதனால் வெற்றி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். இதன் பிறகு சீரியலில் பல மாற்றங்கள் நடக்க உள்ளது.