ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடியிருப்பு பள்ளிகள் மட்டும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் 4 மாத காலமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது பல்வேறு மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட ஹிமாச்சல பிரதேச அரசு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் தற்போது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ‘மாநிலம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது உயர்ந்து வருகிறது.
விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்களின் கேள்விக்கு கொந்தளிப்பு!
அதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மட்டுமே பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளை முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் செயல்பட அரசு அனுமதி கொடுத்துள்ளது. இப்பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
“ரோஜா” சீரியல் கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – நிஜமாவே அழுதாராம்!
மேலும் அம்மாநிலத்தில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டுதல்களுடன் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்தது. மேலும் அம்மாநிலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பரிசோதனை அறிக்கைகள் அல்லது தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர வரும் நாட்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து அரசு சிந்திக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.