பிப்ரவரி 17 முதல் பள்ளிகள், அங்கன்வாடிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!
கொரோனா தொற்றுநோய் பரவத்தொடங்கிய சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆரம்ப வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் பிப்ரவரி 17 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
அங்கன்வாடிகள் திறப்பு
குஜராத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வருவதால், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப நிலைப்பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளை பிப்ரவரி 17 முதல் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றுநோய் தொடங்கிய சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குஜராத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், மாநில அரசு அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக மாநிலத்தின் கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருப்பதாக மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி நேற்று (பிப்.14) தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, ‘கொரோனா தொற்றுநோயின் கடந்த இரண்டு ஆண்டுகளில், முன்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மீண்டும் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பாலர் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் பிப்ரவரி 17 முதல் மீண்டும் திறக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
இருப்பினும் அம்மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோரின் ஒப்புதல் தேவை. இப்போது அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் போது முன்பு வழங்கப்பட்ட கொரோனா நடத்தை விதிககளை பின்பற்றி கல்வியை வழங்க தொடங்கலாம். மேலும் அங்கன்வாடி செயல்பாடுகளை கையாளும் அதிகாரிகள் மற்றும் பள்ளிகளின் உரிமையாளர்கள் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் குஜராத்தில் கடந்த பிப்.13ம் தேதியன்று 1,274 கொரோனா பாதிப்புகள் மற்றும் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.