கதிரின் ஹோட்டலுக்கு மறைந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
கதிரும் முல்லையும் தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்று திறந்துள்ளனர். அந்த கடை திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் மறைந்து மறைந்து வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது தான் கதிரும் முல்லையும் ஹோட்டல் திறந்திருக்கிறார்கள். அதாவது, முல்லையின் செயற்கை முறை கருவுறுதலுக்கு செலவான 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்கும் வரைக்கும் வீட்டிற்கு வரவே மாட்டேன் என கதிரும் முல்லையும் குடும்பத்தை விட்டே பிரிந்து வந்திருக்கிறார்கள். ஆனால், எப்படி அவ்வளவு பெரிய தொகையை ரெடி செய்வது என யோசித்து கொண்டிருந்த நேரத்தில் முல்லை தான் ஹோட்டல் வைக்கலாம் என ஐடியா கூறுகிறார்.
எப்படியோ முல்லையின் நகைகளை அடகு வைத்து கதிரும் முல்லையும் ஹோட்டல் திறந்துவிட்டார்கள். என்ன தான் கதிர் மீது மூர்த்திக்கு கோவம் இருந்தாலும் கதிரின் கடை திறப்பு விழாவை யாருக்கும் தெரியாமலாவது பார்த்துவிட வேண்டும் என ஒளிந்து இருந்து பார்க்கிறார். அதே போல குடும்பத்தில் உள்ள அனைவருமே மறைந்து மறைந்து கதிரும் முல்லையும் புதிதாக திறந்திருக்கும் ஹோட்டலுக்கு வருகின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து மறைந்திருந்து ஓடுவது என அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் கதிரும் முல்லையும் வீட்டிற்கு வர வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால், கதிர் 5 லட்ச ரூபாயை அடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
வெண்பாவிற்கு திருமணத்தை நடத்தி வைக்கும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!
Exams Daily Mobile App Download
என்ன தான் புதிதாக ஹோட்டல் திறந்தாலும் பெரிய அளவில் லாபம் வைத்தெல்லாம் விற்பனை செய்ய போவதில்லை என கதிரும் முல்லையும் முடிவு செய்திருக்கின்றனர். பெரிய அளவில் லாபம் இல்லையெனில் எப்படி கதிரும் முல்லையும் 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க போகிறார்கள், எப்போது குடும்பத்துடன் சேர போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை நாளுக்கு நாள் வியாபாரம் பெருகி டெலிவரி செய்கிற அளவுக்கு வளர்ந்து பெரிய அளவில் கடையை டெவலப் செய்ய போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.