விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தனக்கு மதிப்பு கிடையாது என அவ்வப்போது மீனா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் ஐஸ்வர்யா சமைத்ததை மட்டும் அனைவரும் பாராட்டியதால் ஐஸ்வர்யா மீது மீனா கொலைவெறியில் இருக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்வார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முல்லையின் சிகிச்சைக்காக மட்டும் குடும்பத்தினர்கள் பல லட்சங்கள் செலவு செய்தார்கள். ஆனால், நான் குடும்பத்தினரிடம் காசு கேட்கும் போது மட்டும் எனக்கு கொடுக்க மறுக்கிறார்கள் என அவ்வப்போது மீனா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது தனத்தின் பிறந்த நாளுக்காக பலரும் பரிசு பொருட்களை வாங்கி கொண்டு வருகின்றனர். அப்போது வீட்டில் மீனாவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் சமையல் போட்டி வைக்கின்றனர். பெரும்பாலும் ஐஸ்வர்யா சமைத்தது தான் நன்றாக இருப்பதாக அனைவரும் ஐஸ்வர்யாவை பாராட்டுகின்றனர். ஐஸ்வர்யாவை பாராட்டுவது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. மீனாவின் அப்பா ஜனார்த்தனன் கூட ஐஸ்வர்யா சமைத்தது தான் நன்றாக இருக்கிறது எனக் கூறியதும் மீனா ஜனார்த்தனனிடம் சண்டை போடுகிறார்.
அடுத்ததாக, முல்லையின் சிகிச்சைக்காக மட்டும் குடும்பத்தினர்கள் ஐந்து லட்சம் வரைக்கும் செலவு செய்தார்கள். ஆனால், எனது மகளுக்கு மட்டும் காசு கொடுக்க குடும்பத்தினர்கள் யோசிக்கிறார்கள் என்று ஜனார்த்தனன் புதிதாக ஒரு பிரச்சினையை ஆரம்பிக்கிறார். எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சினைகளை இழுத்து மீனாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என ஜனார்த்தனன் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஜனார்த்தனன் திட்டத்தை புரிந்துகொண்டு மீனா ஜீவாவுடன் இந்த வீட்டிலேயே வசிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.