பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர்கள், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலக்ஷ்மி சீரியல் தான் டாப் ரேட்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நாள் ஒன்றுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பல மாதங்களாக பாக்கியாவிடமும் ராதிகாவிடம் மாட்டாமல் தனது தந்திர புத்தியை பயன்படுத்தி கோபி தப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால் தற்போது கோபி கையும் களவுமாக பிடிபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் கோபியை பற்றிய உண்மைகள் அனைத்தும் ராமமூர்த்தி தாத்தாவிற்கு மட்டுமே தெரியும். பின்பு மூர்த்திக்கும் தனத்திற்கும் அந்த உண்மைகள் தெரிய வந்து ராதிகாவிடம் நேரில் சென்று நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறவர்களின் குடும்பத்தை பார்த்துவிட்டு எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்கள் என கூறி விடுகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் வீடியோ!
இதனால் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வர அடிக்கடி உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என கூறியபடியே இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கோபி நன்றாக குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு வருகிறார். அப்போதும் ராதிகா உங்களது வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் என கேட்டவுடன் பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Exams Daily Mobile App Download
பாக்கியலட்சுமி சீரியலில் அதிகமான சம்பளம் வாங்குபவர் என்றால் அது பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தான். ஒரு நாள் ஒன்றுக்கு மட்டுமே 15000 ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார். மேலும், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் நாளொன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா 12000 ரூபாயும், ஜெனி ஒரு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரமும், செழியன் நாளொன்றுக்கு 10 ஆயிரமும், எழில் நாளொன்றுக்கு 10 ஆயிரமும், இனியா நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாயும் சம்பளம் வாங்குவதாக தகவல் லீக் ஆகியுள்ளது.