ரயில் பயணிகள் கவனத்திற்கு – டிக்கெட் வழங்குவது நிறுத்தம்! போராட்ட எதிரொலி!
அக்னிபத் திட்டம் நாடு முழுவதும் வேலை தேடும் இளைஞர்களிடம், குறிப்பாக முப்படையில் சேர்வதற்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்க தென்னக ரயில்வே முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
முக்கிய நடவடிக்கை:
‘அக்னிபத்’ என்ற பெயரில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத இளைஞர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவதால் மற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என, கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால், இந்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல மாநிலங்களில் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று, ராணுவ விவகாரத் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களிடம் கூறியது, அக்னிபத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் பரிந்துரைகளின் அடிப்படையில் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்னி வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
தமிழகத்தில் நாளை (ஜூன் 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அக்னி வீரர்கள் உயிர் தியாகம் செய்தால் 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மேலும் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற முடியாது என கூறியுள்ளார். அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மேலும் வட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்னிபத் போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்க தென்னக ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.