அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட கடுமையான வெப்பநிலை நிலவும் – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

0
அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட கடுமையான வெப்பநிலை நிலவும் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட கடுமையான வெப்பநிலை நிலவும் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட கடுமையான வெப்பநிலை நிலவும் – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

அடுத்த 4 நாட்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இயல்பை விட வெப்பச்சலனம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடுமையான வெப்பநிலை

கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலுமே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. எப்போதும் சித்திரை மாதத்தில் தான் அதிகமான வெப்பநிலை காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்பச்சலனம் அதிகமாக இருந்தது. அதிகமான வெப்ப சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பொழிவும் இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது அடுத்த நான்கு நாட்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதாவது பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை அதிகமான வெப்பநிலை நிலவும் எனவும், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை அதிகமான வெப்பநிலை தொடரும் எனவும், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்பநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

மேலும் வடமாநிலங்களில் இந்த நான்கு நாட்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெப்பசலனத்தின் காரணமாக மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!