தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடம் காலியாக உள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மின் கட்டண உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகை, கடை வாடகை மற்றும் சிறு குறு தொழில்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்ட பிறகு முடிவு செய்யப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடம் காலியாக உள்ளது. இதில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதாவது, தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதனால் சட்டத்துறை உறுப்பினர் இல்லாத போது மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் இது தொடர்பான மனுவில், தற்போது கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த தடை விதிக்கவும் அத்துடன் சட்டத்துறை உறுப்பினர் பணியிடம் நிரப்பிய பிறகு கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5G சேவைகளில் மாற்றம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படும் போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் கட்டாயமாக இருக்க வேண்டும். எனவே அப்பணியிடம் நிரப்பும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனுவிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!