ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் சூழலை கவனத்தில் கொண்டு முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதையடுத்து சில மாநிலங்களில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகண்ட் மாநில அரசு கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று (ஆகஸ்ட் 24) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட புதிய உத்தரவின்படி, ‘முழு ஊரடங்கு உத்தரவானது ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 31, காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
சென்னை: மீண்டும் சரிந்த பெட்ரோல், டீசல் விலை – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
மேலும் பொது முடக்க காலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுத்துள்ள உத்தரகண்ட் மாநில அரசு, ஊரடங்கு காலத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கொடுத்துள்ளது. இருப்பினும், விழாவில் கலந்து கொள்ளும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக RT-PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு – வாகன வரி செலுத்த கால அவகாசம்!
தவிர இறுதிச் சடங்குகளில் 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை சமூக, அரசியல் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை மீறும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.