சென்னை: மீண்டும் சரிந்த பெட்ரோல், டீசல் விலை – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் சென்று உள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைவதால் எரிபொருள் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவை சந்தித்தது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவு குறைந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அதிர்ச்சி அடைந்தது.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு – வாகன வரி செலுத்த கால அவகாசம்!
தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ளதால் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. புதிய உச்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனையானது. தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் மீதான மாநில வரியை ரூ.3 குறைத்தது. இதனால் மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாய் ஆனது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை கருத்தில் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விலை 20 பைசா வரை லிட்டருக்கு குறைக்கப்பட்டது.
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – RBI அறிவிப்பு வெளியீடு!!
இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 12 காசுகள் குறைந்து ரூ.99.12 மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.